டென்னிஸ் வீரர் ரபெல் நடால் கொரோனா உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி
20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான 35 வயது ரபெல் நடால் (ஸ்பெயின்) அபுதாபியில் கடந்த வாரம் நடந்த உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் கண்காட்சி போட்டியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் போட்டி முடிந்து நாடு திரும்பிய அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலை கடைபிடித்து வருகிறார்.
சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தகுந்த மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் டுவிட்டர் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
காயத்திலிருந்து மீண்டு காட்சி போட்டியில் கலந்து கொண்ட ரபெல் நடால் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதால், மெல்போர்னில் ஜனவரி 17ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பாரா? என்பது சந்தேகம் எழுந்துள்ளது.