கால்பந்து ஜாம்பாவான் மரடோனாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் : உறவினர்கள், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
கால்பந்து ஜாம்பாவான் மரடோனாவின் முதலாண்டு நினைவுத் தினத்தையொட்டி, அவரது உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கால்பந்து உலகில் தனிக்கென தனி சாம்ராஜ்யம் கட்டி ஆண்டவர் மாரடோனா. போகா ஜூனியர்ஸ் (Boca Juniors), நெப்போலி (Napoli), பார்சிலோனா (Barcelona) ஆகிய கால்பந்து கிளப்களுக்காக விளையாடி இருக்கிறார்.
அற்புதமான மரடோனாவின் திறமைகளுக்கு கால்பந்து ரசிகர்கள் அனைவரும் அடிமை என்றே சொல்லலாம். 1986ம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து போட்டிகளிலிருந்து இங்கிலாந்தை வெளியேற்றியதற்கும் மரடோனா ஒரு காரணம். அப்போதிலிருந்து 'Hand of God' என்ற சொல்லாடல் மிகவும் பிரபலமானது.
உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருந்த அர்ஜெண்டினாவின் மரடோனா (60), கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில், பியூனஸ் அயர்ஸில் உள்ள மரடோனாவின் கல்லறையில், அவரது 8 வயது மகன் மற்றும் உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, அர்ஜெண்டினாவின் பல இடங்களில், அவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மரடோனாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்ற புகாரில் 7 மருத்துவ அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.