வெள்ளி பதக்கத்தை வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்திய வீர, வீராங்கனைகள் பதக்கத்தை வென்று குவித்து வருகிறார்கள். போட்டியின் ஆரம்பிக்கட்டத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பதக்கங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
ஆனால், நேற்று மகளிருக்கான ஏர் ரைபிள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பதக்க வேட்டையை துவக்கி வைத்தார் அவனி லெகாரா. அவரைத் தொடர்ந்து தேவேந்திரா, சுந்தர் சிங், யோகேஷ் கத்தூனியா, சுமித் அண்டில் அடுத்தடுத்து பதக்கங்கள் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலையில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் சிங்ராஜ் அதனா 2ம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இவரைத் தொடர்ந்து, தற்போது தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். அதே போட்டியில் பீகாரைச் சேர்ந்த சரத்குமார் வெண்கலம் பதக்கம் பெற்றுள்ளார்.
இதன்மூலம் இந்தியாவுக்கு கிடைத்த பதக்கங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அதில், மாரியப்பன் மென்மேலும் உயர்ந்துக் கொண்டிருக்கிறார். அவரது சாதனையை எண்ணி இந்தியா பெருமை கொள்கிறது என பதிவிட்டுள்ளார்.
Soaring higher and higher!
— Narendra Modi (@narendramodi) August 31, 2021
Mariyappan Thangavelu is synonymous with consistence and excellence. Congratulations to him for winning the Silver Medal. India is proud of his feat. @189thangavelu #Paralympics #Praise4Para pic.twitter.com/GGhtAgM7vU