“எங்களை பெருமைப்படுத்திய பவினாவின் வெற்றியை நாங்கள் கொண்டாடப்போகிறோம்” – தந்தை மகிழ்ச்சி

sports-india-samugam
By Nandhini Aug 29, 2021 05:07 AM GMT
Report

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த தொடர் கடந்த 24ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து 54 வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் குதிரையேற்றம் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்று வருகிறது. டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் அனைவரின் கவனத்தையும் பெற்றார். காலிறுதிச் சுற்றில் செர்பியாவின் போரிஸ்லாவா ராங்கோவிக்கை எதிர்த்து விளையாடிய பவினா படேல் அட்டகாசமாக விளையாடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிச் சென்றார்.

அரையிறுதியில் 2016ம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சீன வீராங்கனை மியா சேங்கை 7-11 11-7 11-4 9-11 11-8 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இதனையடுத்து, இறுதிப் போட்டிக்குள் நுழைந்து வரலாற்றுச் சாதனை படைத்தார் பவினா. இறுதிப் போட்டியில் பவினா படேல் உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் யிங் ஜாவுடன் மோதினார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய யிங் பவினாவை திணறடிக்கச் செய்தார்.

பவினா எவ்வளவு முயற்சி செய்தும் பலன் கொடுக்கவில்லை. இறுதியில் 7-11, 5-11, 6-11 என்ற செட் கணக்கில் பவினா சீன வீராங்கனையிடம் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டார். தோற்றாலும் பவினாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இருந்தாலும், வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் பவினா. இவருக்கு பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து பேசிய பவினாவின் தந்தை ஹம்சுக்பாய், “பவினா எங்களை பெருமைப்படுத்தியிருக்கிறார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க இருக்கிறோம். அவருடைய வெற்றியை நாங்கள் கொண்டாடப்போகிறோம்” என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். 

“எங்களை பெருமைப்படுத்திய பவினாவின் வெற்றியை நாங்கள் கொண்டாடப்போகிறோம்” – தந்தை மகிழ்ச்சி | Sports India Samugam