இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி திடீரென மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி

hospital Admitted ganguly
By Nandhini Dec 28, 2021 05:14 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த கங்குலிக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுபட்டபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அவருக்கு அஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் குணமாகி வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து 20 நாட்களுக்கு பிறகு, ஜனவரி 28ம் தேதி மீண்டும் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனையடுத்து, 2வது முறை ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது 2 தமனிகளில் இரண்டு ஸ்டென்ட்கள் வைக்கப்பட்டது. இதனையடுத்து, கங்குலி தனது அன்றாட வேலைகளை செய்து வந்தார்.

மேலும், கொரோனா தடுப்பூசியையும் கங்குலி முழுமையாக செலுத்திக்கொண்டார். இந்நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டாரா இல்லையா என்பதைக் கண்டறிய அவரது இரத்த மாதிரிகள் மரபணு வரிசைமுறைக்கு அனுப்பப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அவர் நேற்று இரவு உட்லண்ட்ஸ் நர்சிங் ஹோமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மருந்து கொடுக்கப்பட்டு தற்போது உடல்நிலை சீராக உள்ளது என்று என்று பிசிசிஐ வட்டாரம் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த வருடத்தில் கங்குலி இதோடு 3-வது முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.