ஹாக்கி போட்டியில் இரு அணி வீரர்களுக்கிடையே பயங்கர சண்டை - 2 பேர் காயம்; 8 பேர் மீது வழக்குப்பதிவு

sports-fight
By Nandhini Oct 25, 2021 04:27 AM GMT
Report

கோவில்பட்டி அருகே ஹாக்கி மைதானத்தில் இரு ஹாக்கி அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஏற்பட்ட சண்டையில் 2 வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் கூசாலிபட்டி மற்றும் தெற்கு திட்டங்குளம் அணிகளுக்கு இடையே நேற்று மாலை ஹாக்கி போட்டி நடந்தது. அப்போது, கூசாலிபட்டி ஹாக்கி வீரர் அரவிந்த், திட்டங்குளம் வீரர் சுந்தராஜ் ஆகியோர் ஒருவரை ஒருவர் இடித்துகொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி இரு தரப்பு வீரர்களுக்கு இடையே கை கலப்பாக மாறியது. இதில் அரவிந்த் சிங்கிற்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுந்தராஜுக்கும் லேசனா காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்க்ள கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து அரவிந்த் சிங் கொடுத்த புகாரின் பெயரில் திட்டங்குளம் ஹாக்கி அணியை சேர்ந்த கரன், ஆனந்த், மனோஜ், மணி ஆகியோர் மீதும், சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின் பெயரில் சிவா, அரவிந்த், அசோக், விஜயக்குமார் ஆகியோர் மீது மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

ஹாக்கி போட்டியில் இரு அணி வீரர்களுக்கிடையே பயங்கர சண்டை - 2 பேர் காயம்; 8 பேர் மீது வழக்குப்பதிவு | Sports Fight