ரசிகர்களுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த யுவராஜ் சிங் - டுவிட்டரில் வைரலாகும் மாஸான வீடியோ

sports-cricket-yuvarajsign
By Nandhini Dec 08, 2021 07:33 AM GMT
Report

2011 உலகக்கோப்பை சாம்பியன் அணியின் தொடர் நாயகனான ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் நேற்று டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், மீண்டும் கிரிக்கெட் களத்தில் மட்டையை கையில் பிடித்து இறங்குவார் என்று சூசகமான மெசேஜை ரசிகர்களுக்குப் பகிர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோவில், ‘இட் இஸ் டைம் ஃபார் மை செகண்ட் இன்னிங்ஸ்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கிளிப்பில் தனது சாதனைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு, யுவராஜ் சிங் தான் திரும்பி கிரிக்கெட்டுக்கு வருவது பற்றி கூறினார். தனது டுவிட்டர் பக்கத்தில், “கடவுள்தான் நம் விதியை தீர்மானிக்கிறார்.பொதுமக்கள் விரும்பினால் நான் மீண்டும் களம் புகுவேன். பிப்ரவரியில் மீண்டும் நான் வரலாம்” என்று பதிவிட்டிருந்தார்.

2019-ம் ஆண்டு, யுவராஜ் சிங் கிரிக்கெட் போட்டியிலிருந்து தான் ஓய்வு எடுப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் 59 டி20 சர்வதேசப் போட்டிகள் என்று அசத்திய யுவராஜ் சிங் போன்ற இன்னொரு வீரரை இன்னும் இந்திய அணி கண்டுப்பிடிக்கவில்லை.

இந்நிலையில், யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள இந்த வீடியோவால் ரசிகர்கள் மீண்டும் யுவராஜ் சிங் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்ப்பில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.