திடீரென கே.எல்.ராகுலை கூப்பிட்டு ‘அட்வைஸ்’ செய்த கோலி... - கடுப்பில் அடுத்து நடந்த சம்பவம் - வைரலாகும் வீடியோ
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நடப்பு கேப்டன் கே.எல்.ராகுலுக்கு விராட் கோலி அறிவுரை வழங்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜோடி சேர்ந்த டி-காக் மற்றும் வான் டெர் டஸ்ஸன் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதனால் இவர்கள் இருவரையும் அவுட்டாக முடியாமல் நீண்ட நேரமாக இந்திய அணி திணறிக் கொண்டிருந்தது.
அதனால் போட்டி கைநழுவி செல்வதை உணர்ந்த விராட் கோலி, வேகமாக நடப்பு கேப்டன் கே.எல்.ராகுலிடம் சென்று பில்டிங்கை செட் செய்வது குறித்து அறிவுரை கூறினார். இதற்கு கே.எல்.ராகுல் ஏதோ விளக்கம் கொடுக்க முயன்றுள்ளார்.
இதனால் சற்று கோபமான விராட் கோலி, சில அறிவுரைகளை வழங்கி விட்டு அங்கிருந்து சென்றார். இதனையடுத்து, பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவர்களில் 2 விக்கெட்டுகள் விழுந்தது.
இந்த இரண்டு விக்கெட்டையும் பவுண்டரி லைனில் நின்ற விராட் கோலியே கேட்ச் பிடித்து வீழ்த்தினார். வழக்கமாக ஒரு விக்கெட் விழுந்தால் அனைத்து வீரர்களும் சென்று சம்பந்தப்பட்ட வீரரை பாராட்டுவது வழக்கமான ஒன்று. ஆனால் விராட் கோலி கேட்ச் பிடித்ததும் பந்தை தூக்கி வீசிவிட்டு யாரிடமும் பேசாமல் திரும்பி சென்றுவிட்டார்.
மற்ற வீரர்களும் இந்த இரு விக்கெட்டுகளையும் பெரிதாக கொண்டாடவே இல்லை. இதனால் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? என்று நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கடைசி ஓவர் என்பதால் வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடாமல் இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் டேனிஷ் கனேரியா (Danish Kaneria), இந்திய அணி விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் தலைமையில் இரு அணிகளாக பிரிந்துள்ளது என்ற சர்ச்சையை கருத்தை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.