‘கோலியின் அணுகுமுறை பிடிக்கும்.... ஆனால் அவர் நிறைய சண்டையிடுகிறார்...’ - கங்குலி ஓபன் டாக்

ganguli sports-cricket virat-kohli
By Nandhini Dec 19, 2021 06:29 AM GMT
Report

எனக்கு விராட் கோலியின் அணுகுமுறை பிடிக்கும், எந்தவொரு விஷயத்திலும் மிகவும் போராடி முயற்சி செய்பவர் என்று கங்குலி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி, விராட் கோலியுடன் மோதல் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கோலியின் அணுகுமுறை குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் கங்குலி.

சமீப சில நாட்களாக, கேப்டன்சி பிரச்னைகள் குறித்து சில சர்ச்சைகள் கிளம்பி பூதாகரமாக வெடித்து வந்தது.

இந்த விவகாரத்தில், விராட் கோலி டி-20 ஐ கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று போர்டு உறுப்பினர்கள் யாரும் என்னிடம் கூறவில்லை என்றார். ஆனால், கங்குலி சார்பில் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகவே வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் நான் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, விராட் கோலி கருத்துக்கம், பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்திற்கும் முரண்பாடு ஏற்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். தற்போது, கோலி மற்றும் கங்குலி ரசிகர்கள் தங்கள் ஆதரவு இவர்களுக்கே என்று டுவிட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், குர்கானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கோலியின் அணுகுமுறை குறித்து கங்குலி பேசி இருக்கிறார். கங்குலியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியில் எந்த வீரரின் மனோபாவம் உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்கப்பட்டது.

அந்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எனக்கு விராட் கோலியின் அணுகுமுறை பிடிக்கும். ஆனால் அவர் நிறைய சண்டையிடுகிறார்’ என்றார்.

எப்படி நீங்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறீர்கள் என்ற கேள்வியும் கங்குலியிடம் கேட்கப்பட்டது. இதற்கு ஒரு கிண்டலான பதிலை கங்குலி கொடுத்தார். “வாழ்க்கையில் யாருக்கும் எந்த மன அழுத்தமும் இல்லை. மனைவியும் காதலியும்தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய மன அழுத்தம் என்றார். முன்னதாக, இந்தியாவின் முழுநேர ஒயிட்-பால் கேப்டனாக இருந்த விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.

இதற்கு முன்பாக, விராட் கோலியிடம் டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கேட்டு கொண்டோம். ஆனால், அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

டி-20 மற்றும் ஒருநாள் என இரண்டு வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பதை தேர்வாளர்கள் சரியாக உணரவில்லை.

அதனால் தான் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தோம் என்று பிசிசிஐ தலைவர் கூறினார். இதைத் தொடர்ந்து, கோலியின் கருத்தும் உங்களது கருத்தும் முரண்பட்டு இருப்பதாக செய்தியாளர்கள் கேள்வி கங்குலியிடம் எழுப்பினார்.

அப்போது, ​​“இதை பெரிய பிரச்சனையாக எடுத்துச் செல்ல வேண்டாம், நான் எதுவும் சொல்ல முடியாது. இது பிசிசிஐயின் விஷயம், அவர்கள் அதை சமாளிப்பார்கள் என்றார்.