2-வது டெஸ்ட் போட்டி - திடீரென விலகிய விராட் கோலி – ஏமாற்றத்தில் உறைந்த ரசிகர்கள்
தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையே 2-வது டெஸ்ட் போட்டியில் முதுகுவலி காரணமாக விராட் கோலி விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால், அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். தென்னாபிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இதில், முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது.
கடந்த டிசம்பர் 26ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது.
இந்நிலையில்,தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதுகுவலி காரணமாக விலகி இருக்கிறார். இதனால், டெஸ்ட் போட்டியில் விராட்டின் ஆட்டத்தை காண இருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனால்,2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது, டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Toss Update - KL Rahul has won the toss and elects to bat first in the 2nd Test.
— BCCI (@BCCI) January 3, 2022
Captain Virat Kohli misses out with an upper back spasm.#SAvIND pic.twitter.com/2YarVIea4H