நியூசிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி - டாஸ் வென்றது இந்திய அணி

sports-cricket- test-match
By Nandhini Dec 03, 2021 06:37 AM GMT
Report

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி இருக்கிறது. 2 அணிகளும் மோதிய கான்பூர் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி 'டிரா' செய்தது.

இந்நிலையில், தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரண்டு அணிகளும் 2வது டெஸ்ட்டை எதிர்நோக்கி இருக்கின்றன.

நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. முதல் டெஸ்ட்டில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். இதனால், ரசிகர்களிடையே இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கிரிக்கெட் மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது. இதனால், போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இன்று காலை 9 மணிக்கு போடப்பட இருந்த டாஸ் இரண்டரை மணி நேரம் தாமதமாகி இருக்கிறது. இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.

இதனையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. இந்தப் போட்டயில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக டாம் லேதம் கேப்டனாக செயல்படுவார். 

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி - டாஸ் வென்றது இந்திய அணி | Sports Cricket Test Match