‘இதை மாத்துனாதான் நாங்கள் வருவோம்?’ - ‘கண்டிசன்’ போட்ட இலங்கை - பிசிசிஐ முடிவு என்ன?

BCCI sports-cricket Sri Lanka requests
By Nandhini Jan 27, 2022 04:08 AM GMT
Report

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன்பு இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 டி20 போட்டிகள் தொடரில் விளையாடுகிறது. வரும் பிப்ரவரி 20-ம் தேதி வரை இத்தொடர் நடைபெற உள்ளது.

பிசிசிஐ முதலில் டி20 தொடரை நடத்தினால் ஆஸ்திரேலியாவில் பபுளில் இருந்த இலங்கை வீரர்கள் நேரடியாக இந்தியாவுக்கு வந்துவிடுவார்கள். இது பயோ பபுள் பாதுகாப்பு சிரமங்களை குறைக்கும்.

மேலும், ஆஸ்திரேலியாவுடன் ஏற்கனவே டி20 போட்டிகளில் விளையாடிவிட்டு வருவதால், இலங்கைக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அதனால் தான் டி20 தொடரை முதலில் வைக்க வேண்டும் என்று பிசிசிஐயிடம் இலங்கை அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘இதை மாத்துனாதான் நாங்கள் வருவோம்?’ - ‘கண்டிசன்’ போட்ட இலங்கை - பிசிசிஐ முடிவு என்ன? | Sports Cricket Sri Lanka Requests Bcci