‘அந்த பையனை நான் ஒவ்வொரு டைம் பார்க்கும்போது... புதுசா ஏதாவது ஒன்னு பண்றான்ப்பா... - இளம்பவுலரை புகழ்ந்து தள்ளிய சச்சின்
இந்திய அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலராக இருப்பவர் முகமது சிராஜ். இவர் 2020-2021ம் ஆண்டு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அசத்தலாக பந்துவீசி இந்திய அணியில் சீனியர் பவுலர்களுக்கு மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர், 33 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் முகமது சிராஜ். தனது அபாரமான வேகத்தின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டு வருகிறார் சிராஜ். இந்நிலையில், முகமது சிராஜை குறித்து சச்சின் டெண்டுல்கர் வெகுவாக பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் நல்ல விதமாக மதிப்பிட்டு பாராட்டிய ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்கள் சர்வதேச அரங்கில் அசத்தி வருகிறார்கள். இந்நிலையில், சிராஜ் குறித்து கருத்து சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது -
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்ன் டெஸ்ட்டில் சிராஜ் அறிமுகமானார். அப்போது, அவர் அறிமுக போட்டியில் ஆடியதை போலவே இல்லவே இல்லை. அந்தளவிற்கு முதிர்ச்சியாக பந்து வீசினார்.
அவரது அடுத்தடுத்த ஸ்பெல்களை சிறப்பாக வீசிக்கொண்டே சென்றார். ஒவ்வொரு முறை நான் அவரை பார்க்கும்போதும் புதிதாக ஏதாவது ஒன்றை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.
அவரை பார்க்கும்போது அவரது கால்களில் ஸ்ப்ரிங் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. எப்போதுமே முழு எனர்ஜியுடன் இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் ஒருநாளின் கடைசி ஓவரை அவர் வீசும்போது கூட முதல் ஓவரை வீசுவதை போன்ற எனர்ஜியுடன் இருந்தார்.
சிராஜ் ஒரு முழுமையான ஃபாஸ்ட் பவுலர். அவரது உடல்மொழி எப்போதுமே பாசிட்டிவாகத்தான் உள்ளது. மிகவும் வேகமாக கற்றுக்கொள்கிறார்.
இவ்வாறு சச்சின் புகழாராம் சூட்டியுள்ளார்.