ரோகித் சர்மா தலைமையில் ‘நியூ லுக்’ இந்திய அணி - அஸ்வின் நீக்கம் - ரசிகர்கள் அதிர்ச்சி

Rohit Sharma New Look's Indian team Dismissal of Aswin
By Nandhini Jan 27, 2022 05:25 AM GMT
Report

 2023ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்யும் நோக்கத்துடன் சில புதுமுகங்களுக்கான வாய்ப்புகளுடன் மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு ரோகித் சர்மா தலைமைக்குத் திரும்பி விட்டார். மே.இ.தீவுகளுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த அணியில் குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்குத் திரும்பி இருக்கிறார். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கத் திண்டாடி வருவதால் குல்தீப் யாதவ் வருகை ரசிகர்களால் பலமாக எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் ஐபிஎல் புகழ் தீபக் ஹூடாவுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் 3-0 என்று உதை வாங்கிய இந்திய அணியில் ஸ்பின்னர்கள் செகல், அஸ்வின், ஜெயந்த் யாதவ் 59 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளையே கைப்பற்றினார்கள்.

இதனையடுத்து, ராகுல் திராவிட் மிடில் ஓவர்கள் அதாவது 11-40 ஓவர்கள் காலக்கட்டத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் பவுலர்கள் இல்லை என்பதே உண்மை.

ஆனால் அதற்காக அஸ்வினை மட்டும் டிராப் செய்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை, ஆனால் அஸ்வினின் பவுலிங்கில் எந்த வித தாக்கமும் இல்லை என்பதே உண்மை.

எனவே கோலியின் வழியில் 2017-19-ல் இந்தியாவுக்கு வெற்றிகள் குவிந்ததற்குக் காரணமான குல்தீப், செகல் சேர்க்கைக்கு இந்திய அணி மீண்டும் திரும்பி இருக்கிறது. ரவி பிஷ்னோயும் அணியில் வாய்ப்புப் பெற்றுள்ளார்.

அதே போல் மூத்த பவுலர்கள் பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. புவனேஷ்வர் குமார் டி20 அணியில் மட்டும் இடம்பெற்றிருக்கிறார்கள். ஒருநாள் அணியில் வெங்கடேஷ் அய்யர் கிடையாது.

ஆனால் டி20 செட்-அப்பில் உள்ளார். ஷர்துல் தாக்கூர், தீபக் சாகர் இரு வடிவங்களிலும் இருக்கிறார்கள். சூரியகுமார் யாதவ்வும் ஒருநாள், டி20- அணிகளில் இருக்கிறார். புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் ஒருநாள், டி20 அணிகளில் இடம்பெற்றிருக்கிறார்கள்.