இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட உள்ள முன்னணி வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி

Remove sports-cricket fans shocked leading player
By Nandhini Jan 26, 2022 05:55 AM GMT
Report

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான அணியைத் தேர்வு செய்ய இந்திய தேர்வுக் குழு இந்த வாரம் கூட இருக்கிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா மீண்டும் களமிறங்க இருக்கிறார். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் அனைத்து ஆட்டங்களிலும் பங்கேற்ற பிறகு, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட முகமது ஷமி மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முற்றிலும் சொதப்பிய மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அணியிலிருந்து நீக்கப்பட இருக்கிறார்.

பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் ஷர்துல் தாக்கூர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் தங்கள் அற்புதமான ஆல்ரவுண்டர் செயல்பாட்டிற்குப் பிறகு அணியில் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூத்த ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இன்னும் முழு உடல் தகுதியுடன் கிடையாது. இருந்தாலும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் அவர்களுக்கு பதில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.