தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடரிலிருந்து விலகுகிறார் விராட் கோலி? - ரசிகர்கள் அதிர்ச்சி
விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா தம்பதியின் பெண் குழந்தை வாமிகாவுக்கு ஒரு வயது நிறைவடைவதையொட்டி விராட் கோலி அதைக்கொண்டாடும் வகையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஜனவரி 11ம் தேதி வாமிகாவுக்கு ஒரு வயதாகிறது. இதனையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 19ம் தேதி தொடங்க இருக்கிறது. ஏற்கெனவே வாமிகா பிறந்த போது அடிலெய்ட் டெஸ்ட்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா தொடரிலிருந்தே விலகினார் விராட் கோலி.
இப்போது குழந்தை முதல் பிறந்தநாளையொட்டி தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரிலிருந்து விலக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கோலியிடமிருந்து ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பை பிடுங்கி ரோகித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டதிலிருந்து பல பேச்சுகள், கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. என்னதான் இருவரும் நட்பு என்று கூறிக்கொண்டாலும் உள்ளுக்குள் புகைத்துக் கொண்டுதான் உள்ளனர்.
இந்நிலையில், டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக ரோகித் சர்மாவு விலகியுள்ளார். ஒருநாள் போட்டிக்கு சர்மா வருவது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், கோலியும் இல்லாவிட்டால் யார் அணியை வழிநடத்துவது? அநேகமாக ரிஷப் பண்ட் தலைமையிலோ, ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலோ பொறுப்பு விழலாம்.
ஒரு விதத்தில் ரோகித், கோலி தலைவலிகள் இல்லாமல் இளம் வீரர்களை வைத்து ஆடுவதும் சிறப்பு தான், பார்வையாளர்களுக்கும் புதிய வீரர்களை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்.