ஒரு நாள் அணி கேப்டன் விவகாரம் - விராட் கோலி, ரோகித் சர்மாவை உட்கார வைத்து நேரடியாக பேச பிசிசிஐ முடிவு
sports-cricket
koli
By Nandhini
இந்திய ஒரு நாள் அணி கேப்டன் விவகாரத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரிடமும் பிசிசிஐ அமர்ந்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் கிடையாது என்று இருவரும் வெளியில் சொல்லிக் கொண்டாலும், அணியில் ரோகித் சர்மா ஆட்கள், விராட் கோலி ஆட்கள் என்று இருபிரிவு இருப்பதாக இங்கிலாந்து வீரர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், அதனை, உறுதி செய்யும் விதமாக இந்திய ஒரு நாள் அணி கேப்டன் விவகாரத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரிடமும் பிசிசிஐ அமர்ந்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.