கோலிக்காக நீக்கப்படும் வீரர் இவர்தானாம்?

sports-cricket-koli
By Nandhini Dec 02, 2021 07:42 AM GMT
Report

மாயங்க் அகர்வால் நீக்கம் செய்யப்பட்டு கோலி வருகிறார். ஒருவேளை சாஹா, ஷுப்மன் கில் தொடக்கத்தில் இறங்கி மற்ற டவுன் ஆர்டரை மாற்றாமல் புஜாரா ஒன் டவுன், கோலி 2ம் டவுன், ஷ்ரேயஸ் அய்யர் 3ம் டவுன், ரகானே 4ம் டவுன் என்று இறக்க வாய்ப்பு இருக்கிறது.

நாளை, 3ம் தேதி மும்பையில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தொடங்கும் 2வது இறுதி டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் கோலி திரும்புகிறார், எனவே யாரை அணியிலிருந்து நீக்குவது என்பதில் சிக்கல் எழுந்திருந்தது. இப்போது அதற்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கெனவே, படுமோசமாக ஆடிவரும் புஜாராவை தொடக்க வீரராக ஷுப்மன் கில்லுடன் இறக்கிவிட்டு, மாயங்க் அகர்வாலை வெளியே தள்ளி அவரது இடத்துக்கு விராட் கோலி வரப்போகிறார் என்கிறது இந்திய அணி நிர்வாக வட்டாரங்கள்.

ஏனென்றால், வரலாறு காணாத அறிமுக டெஸ்ட் கண்ட ஷ்ரேயஸ் அய்யர் 105 மற்றும் 65 என்று 2 இன்னிங்ஸ்களிலும் முக்கியமான கிரைசிசில் இறங்கி ஆடினார். இன்னொரு மொகீந்தர் அமர்நாத், என்றே பார்க்க வேண்டி இருக்கிறது.

இந்நிலையில், இவருக்குப் பதிலாக விராட் கோலியை இறக்கி விடுவார்கள் என்றே லஷ்மண் போன்றவர்கள் கருதினார்கள். பாவம் கருண் நாயர் இடம் இப்படித்தான் பறிபோனது.

ரஹானேவுக்காக இறங்கிய கருண் நாயர் முச்சதம் விளாசிய பிறகும் கோடாரி அவர் தலையில் விழுந்தது ரஹானேவுக்காக, ஆனால் இன்று மோசமாக ஆடிவரும் ரஹானேவைத் தக்க வைக்க பாவம் மாயங்க் அகர்வால் தலையில் கோடாரி. 2015-ல் புஜாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடக்கத்தில் இறங்கி சதம் அடித்தார். ஆனால் அது வேற புஜாரா, இது வேற புஜாரா.

இப்போது பேட் முழுக்க அவருக்கு எட்ஜ் ஆகவே இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 2 இன்னிங்ஸ்களில் எட்ஜ் ஆகி அவுட் ஆனால் அல்லது விக்கெட் கீப்பர், ஸ்லிப்பில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தால் கூப்பிட்டு சொல்லி விடுவார்கள், இன்னொரு முறை எட்ஜ் ஆகி அவுட் ஆனால் அணியில் இருக்க மாட்டாய் என்று எச்சரிப்பார்கள்.

இந்நிலையில் பாவம் மாயங்க் அகர்வால் நீக்கப்பட்டு கோலி வருகிறார். ஒருவேளை சாஹா, ஷுப்மன் கில் தொடக்கத்தில் இறங்கி மற்ற டவுன் ஆர்டரை மாற்றாமல் புஜாரா ஒன் டவுன், கோலி 2ம் டவுன், ஷ்ரேயஸ் அய்யர் 3ம் டவுன், ரகானே 4ம் டவுன் என்று இறக்க வாய்ப்பு இருக்கிறது.