திடீரென்று முதல் ஒருநாள் போட்டியிலிருந்து கே.எல் ராகுல் விலகல் - வெளியான காரணம் இதுதானாம்

sports-cricket kl-rahul
By Nandhini Feb 04, 2022 10:45 AM GMT
Report

வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறது.

வரும் 6, 9 மற்றும் 11ம் தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் அகமதாதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்லும், வரும் 16, 18, 20ம் ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டனிலும் நடைபெற இருக்கிறது. இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது.

இந்நிலையில், இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நவ்தீப் சைனி (ஸ்டாண்ட் பை வீரர்) ஆகிய 4 பேருக்கும் கொரோனா உறுதியாகி இருக்கிறது.

இவர்கள் 3 பேரும் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கே.எல்.ராகுலும் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விலகி இருக்கிறார். ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 2 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் கொரோனாவால் ஆட முடியாத நிலையில், கே.எல். ராகுலும் முதல் போட்டியிலிருந்து விலகியதால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

கே.எல். ராகுல் ஏன் முதல் ஒருநாள் போட்டியில் ஆடவில்லை என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. அவரது தங்கையின் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக முதல் ஒருநாள் போட்டியிலிருந்து ராகுல் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருமணத்தை முடித்துவிட்டு, 9ம் தேதி நடக்கும் 2வது ஒருநாள் போட்டியில் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.