பணம் எனக்கு முக்கியம் இல்லை... அணி தான் எனக்கு முக்கியம்... - சிஎஸ்கேவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஜடேஜா
வரும் 2022ம் ஆண்டு ஐபிஎல் சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு தற்போது உள்ள 8 அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களில் அதிகபட்சம் 4 பேரை மட்டுமே ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், சென்னை அணிக்காக ஜடேஜாவும், பெங்களூர் அணிக்காக முகமது சிராஜும் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது. அகமதாபாத் அணி ஜடேஜாவுக்கு 20 கோடி ரூபாய் வரை தர தயாராக இருக்கிறது.
இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை தக்க வைத்துக் கொண்டால் அவருக்கு 16 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும். அந்த 16 கோடி ரூபாயுடன் சென்னை அணிக்காக விளையாட பச்சைக் கொடி காட்டி இருக்கிறார் ஜடேஜா.
அதே போல முகமது சிராஜுக்கு, 10 கோடி ரூபாய் வரை தர தயாராக இருக்கிறது லக்னோ அணி. ஆனால் அவர் 7 கோடி ரூபாயுடன் பெங்களூர் அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்திருக்கிறார். இவர்களது செயல் பணத்தை விட அணியே முக்கியம் காட்டியுள்ளனர்.