ஐபிஎல் 2022; புதிதாக களமிறங்கும் லக்னோ அணிக்கு புதிய பெயர் என்ன தெரியுமா?

new name sports cricket IPL - 2022
By Nandhini Jan 25, 2022 08:17 AM GMT
Report

ஐபிஎல் 2022-ம் ஆண்டு சமீபத்தில் புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணியில் இணைந்த வீரர்களின் பெயர்களை வெளியிட்டு இருந்தது. 15-வது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்தது.

இதில், லக்னோ அணி கே.எல் ராகுலை ரூ. 17 கோடிக்கு தேர்வு செய்துள்ளது. இவர் அந்த அணியின் கேப்டனாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது. மேலும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 9.2 கோடி மற்றும் ரவி பிஷ்னாய் 4 கோடிக்கும் அந்த அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது லக்னோ அணியை பெற்றுள்ள கோயங்கா, இந்த அணிக்கு “சூப்பர் ஜெயன்ட்” என்றே பெயர் சூட்டியுள்ளார்.