IPL 2022 சீசன் மெகா ஏலம் எப்போதுன்னு தெரியுமா? - வெளியான முக்கிய தகவல்

sports-cricket IPL 2022
By Nandhini Dec 07, 2021 10:10 AM GMT
Report

15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம் 2-வது வாரம் நடக்க உள்ளதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதியதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்நிலையில், ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.

இதனையடுத்து, அடுத்த சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம் 2-வது வாரம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக ஜனவரி முதல் வாரத்தில் ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், புதிய அணியான ஆமதாபாத்தை வாங்கியுள்ள சிவிசி கேப்பிட்டல் நிறுவனம் மீது சூதாட்ட புகார் வைக்கப்பட்டிருப்பதால், இதனை விசாரிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

எனவே, இந்த விவகாரத்தில் அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும். இதனையடுத்து, 2 புதிய அணிகளும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக 3 வீரர்களை தங்கள் அணியில் வாங்கிக்கொள்ள 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும். இதனால் ஜனவரி 2-வது வாரத்தில் ஐபிஎல் ஏலம் நடைபெற இருப்பதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார். 

IPL 2022 சீசன் மெகா ஏலம் எப்போதுன்னு தெரியுமா? - வெளியான முக்கிய தகவல் | Sports Cricket Ipl 2022