ப்ளேயர் தப்பு பண்ணா 'தோனி' இப்படிதான் ரியாக்ஷன் கொடுப்பார்... - முதல் முறையாக மனம் திறந்து பேசிய ஹர்திக் பாண்டியா

speech dhoni Hardik Pandya about
By Nandhini Jan 26, 2022 07:26 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தோனியின் கேப்டன்சி குணம் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகளில் ஆடவுள்ளது.

ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வந்த நிலையில், தற்போது புதிய ஐபிஎல் அணிக்கு தலைமை தாங்கவுள்ளதால், உற்சாகத்தில் இருக்கிறார். இதுவரை எந்த அணிக்கும் தலைமை தாங்காத ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி, எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்நிலையில், தான் ஒரு சிறந்த வீரராக மாற யார் காரணம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது -

நான் அனைத்து வீரர்களிடமிருந்து கிரிக்கெட்டின் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். அதிலும் குறிப்பாக மஹி பாயிடம், நிறைய கற்றுக் கொண்டேன். முதலில், நான் சர்வதேச அணிக்காக ஆட வாய்ப்பு கிடைத்த போது, எனக்கு எதுவும் சரிவர தெரியவில்லை.

இந்திய அணிக்குள் நுழைந்த போது, தோனி இருக்கிறார். எனது ஆட்டம் பற்றி அனைத்தையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று தான் நினைத்தேன். ஆனால், தோனி என்னிடம் அதிகம் பேசக் கூட கிடையாது. பந்து எங்கே வீச வேண்டும் என்றும் என்னை அறிவுறுத்தகூட இல்லை.

எனக்கு அவர் அதிக சுதந்திரம் கொடுத்தார். நான் செய்யும் தவறுகளில் உள்ள குழப்பங்களை அறிந்து கொண்டு, அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோனி விரும்பியதை பல ஆண்டுகளுக்கு பிறகு நான் உணர்ந்தேன்.

அப்போது தான், என்னை அதிக நாட்கள் கிரிக்கெட்டில் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதையும் தெரிந்து கொண்டேன். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 போட்டியில் நான் அறிமுகமான போது, வீசிய முதல் ஓவரில் சுமார் 20 ரன்கள் வரை கொடுத்திருந்தேன்.

இதனால், இனிமேல் எனக்கு டி-20 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்தேன். ஆனால், எக்ஸ்ட்ரா கவர் பகுதியில் ஃபீல்டிங் நின்ற என்னை, தோனி மீண்டும் பந்து வீச அழைத்தார். 'என்னை தான் அழைக்கிறாரா?' என்று கூட நினைத்தேன்.

அதன் பிறகு பந்து வீச சென்ற நான், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினேன். அப்போது தான், தோனியிடமிருந்து ஒரு விஷயத்தை புரிந்து கொண்டேன். ஒரு கேப்டனாக தான் இருப்பார் என்பதையே காட்டிக் கொள்ள மாட்டார்.

ஆனால், அவர் எப்போதும் உங்களுடன் தான் இருப்பார். அருகிலேயே இருந்து கொண்டு, நாம் மேம்பட்டு வருவதை கவனித்துக் கொண்டே தான் இருப்பார்.

இவ்வாறு ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.  

ப்ளேயர் தப்பு பண்ணா