‘இவங்க 2 பேரும்தான்ப்பா எனக்கு ரொம்ப பிடிக்கும்...’ - மனம் திறந்து பேசிய ஹர்பஜன்சிங்
இந்திய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஹர்பஜன் சிங். 1998ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டுவரை இந்திய அணிக்காக ஆடினார். இதுவரை அவர் 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 417 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளையும், 28 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், சமீபத்தில் தனக்கு மிகவும் பிடித்த மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தான் என்றும், பிடித்த பவுலர் பும்ரா என்றும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் பேசியதாவது -
இந்திய அணியிலிருந்து ரோஹித்துக்கு மேலாக கோலி தான் மதிப்பிடப்படுகிறார். ஆனால் ரோஹித் சர்மா வேற லெவல் விளையாட்டுக்காரர். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் என அசாத்திய சாதனைகளை அசால்ட்டாக படைத்து வைத்திருப்பவர் ரோஹித் சர்மா. டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து விதமான போட்டிகளிலும் அவரது பேட்டிங் அபாரமாக இருக்கும்.
பவுலர்களில் ஜஸ்ப்ரித் பும்ரா தான் எனது ஃபேவரட். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான ஃபார்மட்டிலும் டாப் கிளாஸ் பவுலர். ரோஹித் மற்றும் பும்ரா தான் எனக்கு மிகவும் பிடித்தமான வீரர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.