கம்பீருக்கு என்னாச்சு? ரசிகர்கள் கொந்தளிப்பு

dhoni sports-cricket kampir
By Nandhini Dec 01, 2021 09:19 AM GMT
Report

சென்னை அணி நிர்வாகமே தோனியை தான் தாங்கள் முதல் வீரராக தக்க வைப்போம் என்று கூறிய பிறகும் கம்பீர் வேண்டும் என்றே, அவர் பெயரை குறிப்பிடாமல் விட்டுள்ளார்.

ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் நடந்தது. சிஎஸ்கே அணி தோனி, ஜடேஜா, ருதுராஜ், கெய்க்வாட், மொயின் அலியை தக்க வைத்திருக்கிறது. இந்நிலையில், முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கம்பீர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி பேசுகையில், சென்னை அணி எந்த 4 வீரர்களை தக்க வைக்க வேண்டும். இளம்வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், ஆல் ரவுண்டர் ஜடேஜா, டுபிளஸிஸ், சாம் கரண் ஆகிய 4 வீரர்களை மட்டும் தான் தக்க வைத்து கொள்ள வேண்டும்.

மற்றவர்களை ஏலத்தில் தேர்வு செய்து கொள்ளலாம் கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் டோனியின் பெயரை கம்பீர் குறிப்பிடவே இல்லை. தோனியின் பார்ம் சற்று பாதிக்கப்பட்டிருந்தாலும், அணியை வழி நடத்தி முக்கிய போட்டிகளில் ரன் குவித்துவிடுவார்.

சென்னை அணி நிர்வாகமே தோனியை தான் தாங்கள் முதல் வீரராக தக்க வைப்போம் என்று கூறிய பிறகும் கம்பீர் வேண்டும் என்றே, அவர் பெயரை குறிப்பிடாமல் விட்டிருக்கிறார். கம்பீருக்கு தோனி மீது பொறாமை. அதனால்தான், அவர் பெயரை கம்பீர் குறிப்பிடவில்லை என்று தோனி ரசிகர்கள் கம்பீர் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். 

கம்பீருக்கு என்னாச்சு? ரசிகர்கள் கொந்தளிப்பு | Sports Cricket Dhoni Kampir