‘One man army...’ நம்பர் 1 வீரர்... நிரூபித்த பட்லர்... - இணையத்தை தெறிக்க விடும் ரசிகர்கள் - வைரலாகும் மாஸ் வீடியோ

IPL 2022
By Nandhini May 28, 2022 10:40 AM GMT
Report

ஐபிஎல் 2வது குவாலிபையர் போட்டியில் படுதோல்வி அடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

நேற்று அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், தன்னுடைய உறுதியான பேட்டிங் முயற்சியால் ராஜஸ்தான் ராயல்ஸ் குவாலிஃபையர் 2ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணியை நாளை (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது.

இந்நிலையில், இப்போட்டியில் பெங்களூர் அணியின் பந்துவீச்சை சிதறடித்து, சதமும் அடித்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்த ஜாஸ் பட்லருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஜாஸ் பட்லரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.