பும்ரா ஏன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்? - எம்எஸ்கே பிரசாத் விளக்கம்

sports-cricket
By Nandhini Jan 02, 2022 10:00 AM GMT
Report

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் தகவல் தெரிவித்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால், அகில இந்திய மூத்த தேர்வுக் குழு, ஒருநாள் தொடருக்கான கேப்டனாக கே.எல்.ராகுலை நியமித்திருந்தது. இதனையடுத்து, துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும், இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஷிகார் தவான், சாஹல், அஸ்வின் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்திய அணியில் அஸ்வின், பண்ட்,ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டிருந்தபோதும், பும்ரா ஏன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்று எல்லார் மனதிலும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விளக்கம் கொடுத்து பேசியதாவது - "ஜஸ்பிரித் கடந்த சில வருடங்களாகவே வேகப்பந்து வீச்சாளராக எல்லா வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக ஏன் உருவாக கூடாது. பும்ராவிற்கும் ஒருமுறை வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம். அவரது தலைமைப்பண்பு எப்படி இருக்கிறது என்று தெரியவரும்.

2023ம் ஆண்டு உலக கோப்பை தொடர்வரை இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், துணைக் கேப்டனாக ராகுலும் செயல்படுவார்கள். ஒரு தொடரில் துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டதில் எந்த தவறும் கிடையாது.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் குறைந்தது 4 முதல் 5 நட்சத்திர வீரர்கள் இருப்பார்கள். ஆனால், இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் 13 முதல் 14 வீரர்களும் நட்சத்திர வீரர்கள் தான். எனவே, சர்வதேச கிரிக்கெட்டில் யார் யார் எந்த இடத்திற்கு பொருத்தமாக இருப்பார்கள் என்று தேர்வு குழுவிற்கு தெரியும்.

இவ்வாறு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.