இனி இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் இவர் தான்

sports-cricket
By Nandhini Dec 14, 2021 07:47 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவர் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஜனவரி 1ம் தேதி முதல் இந்த பொறுப்பை ஏற்கிறார். இலங்கை கிரிக்கெட் அணிக்கும், அதன் உயர்திறன் மேம்பாட்டு மைய நிர்வாகத்துக்கும் அவர் ஆலோசனை வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஜெயவர்த்தனே கூறுகையில், தேசிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு அருமையான வாய்ப்பாகும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்காலத்தில் நிலையான வெற்றியைப் பெற முடியும் என்று நம்புகிறேன்" என்றார். 

இனி இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் இவர் தான் | Sports Cricket