ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து அசத்தல் - இந்திய அணி 345 ரன்னுக்கு ஆல்அவுட்
நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 345 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது.
நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கான்பூரில் நேற்று தொடங்கியது.
'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே, பேட்டிங் தேர்வு செய்தார். முதல் நாளில் சுப்மன் கில், ஜடேஜா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரை சதம் அடித்தார்கள். முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. 2ம் நாளான இன்று போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் ஜடேஜா (50) அவுட் ஆகிவிட்டார். இவரை அடுத்து வந்த சஹா (1) நிலைக்கவில்லை.
பின்னர் வந்த அஸ்வின் கை கொடுக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் விளாசி 105 ரன்னில் வெளியேறினார். முதல் இன்னிங்சில் இந்திய அணி இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி உள்ளது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தீ 5, ஜேமிசன் 3, படேல் 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.