சில வீரர்கள் முன்னேறி வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது - வெற்றிக்குப் பிறகு டிராவிட் பேட்டி

sports-cricket
By Nandhini Nov 22, 2021 06:08 AM GMT
Report

நேற்று நடைபெற்ற கடைசி 20 ஒவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி அடைந்தது. இதனையடுத்து, டி 20 தொடரை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியின் வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியதாவது -

“இது ஒரு நல்ல தொடர் வெற்றி. தொடரில் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நாங்களும் மிகவும் யதார்த்தமாக இருக்கிறோம். உண்மையைச் சொல்வதென்றால், நாம் நம் கால்களை தரையில் வைத்துக்கொண்டு சற்று யதார்த்தமாக இருக்க வேண்டும்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் 3 நாட்களுக்குப் பிறகு விளையாடுவதும், 6 நாட்களில் 3 ஆட்டங்களில் விளையாடுவதும் நியூசிலாந்து அணிக்கு எளிதாக இருக்கவில்லை. இந்திய இளம் வீரர்களின் செயல்பாடுகள் அணிக்கு சாதகமாகவே இருந்தது. இத்தொடரிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டும்.

சில இளைஞர்கள் முன்னேறி வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அதிக அளவில் கிரிக்கெட் விளையாடாத சில வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

சில வீரர்கள் முன்னேறி வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது - வெற்றிக்குப் பிறகு டிராவிட் பேட்டி | Sports Cricket