‘3 வடிவ கிரிக்கெட் - ஒரே கேப்டன்’ : பிசிசிஐயின் அதிரடி முடிவு?

sports-cricket
By Nandhini Nov 09, 2021 10:53 AM GMT
Report

3 வடிவ கிரிக்கெட்டிற்கும் ஒரே கேப்டனை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி படுசோமான தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறது.

மேலும், இந்த உலகக் கோப்பையோடு, டி20 அணிக் கேப்டன் பதவியை விராட் கோலி ராஜினாமா செய்திருக்கிறார். இந்நிலையில், புது கேப்டனை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ இறங்கி உள்ளது. இதுகுறித்து நடந்த மீட்டிங்கில், “கோலி கேப்டன்ஸியில் இதுவரை இந்தியா ஒரு உலகக் கோப்பையை கூட வெல்லவில்லை.

அரையிறுதி, இறுதிப் போட்டிவரை சென்று தோல்வியடைந்து விடுகிறது. தற்போது லீக் சுற்றுடன் வெளியேறிவிட்டோம். இனிமேலும், அவரை கேப்டனாக நீடிக்கவிடக் கூடாது” என நிர்வாகிகள் சிலர் பேசி உள்ளனர்.

இதற்கு ஆதரவும் அதிகமாக இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து தற்போது பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

அது குறித்து கூறுகையில், “3 வடிவ கிரிக்கெட் அணிக்கும் 3 கேப்டன் என்ற முறை சரியாக இருக்காது. அது பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். ஒவ்வொரு தொடரின்போது முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டு விடும். ஒரே மாதிரியான திட்டம்தான் அணிக்கு கைகொடுக்கும். ஒரே கேப்டன் இருந்தால்தான் அது சாத்தியம். ஒருநாள், டி20 அணிக்கு ஒரே கேப்டன் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றார். 

‘3 வடிவ கிரிக்கெட் - ஒரே கேப்டன்’ : பிசிசிஐயின் அதிரடி முடிவு? | Sports Cricket