கொலம்பியாவில் நடந்த ரோலர் ஸ்கேட்டிங் - வெள்ளிப் பதக்கம் வென்று தமிழக வீரர் சாதனை

sports
By Nandhini Nov 17, 2021 03:41 AM GMT
Report

கொலம்பியாவில் நடந்த ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில், ஜூனியர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சென்னை திரும்பிய, தமிழக வீரருக்கு மிகந்த உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கொலம்பியா நாட்டில் சமீபத்தில் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஜூனியர் பிரிவில், சென்னையை சேர்ந்த ஆனந்த்வேல்குமார் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றார். நேற்று அவர் சென்னை திரும்பினார். அப்போது, அவருடன் பல்வேறு பிரிவு போட்டிகளில் பங்கேற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில், வீரர், வீராங்கனைகளுக்கு, பூச்செண்டு, பொன்னாடை அளித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை மேலாளர் சாமுவேல்ராஜா டேனியல், முதுநிலை மேலாளர் மெர்சி ரெஜினா, வீரபத்ரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். வெள்ளி பதக்கம் வென்ற ஆனந்த்வேல் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வெற்றி வீரர் மேம்பாட்டு திட்டத்தில் பயிற்சி பெற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலம்பியாவில் நடந்த ரோலர் ஸ்கேட்டிங் - வெள்ளிப் பதக்கம் வென்று தமிழக வீரர் சாதனை | Sports