மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி - பதக்கங்கள் வென்று அசத்திய திண்டுக்கல் மாணவர்கள் - குவியும் பாராட்டு
மாநில அளவிலான நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் திண்டுக்கல் மாணவர்கள் பதக்களை வென்று குவித்து பெருமை சேர்த்துள்ளனர்.
சென்னையில் கடந்த அக்டோபர் 21 முதல் 24 வரை 16வது தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் 16வது மாநில குத்துச்சண்டை போட்டி, மாநில செயலாளர் பிரித்திவிராஜ் தலைமையில் நடந்தது. இப்போட்டியில் மாநில அளவில் 18க்கும் மேற்பட்ட அணிகளில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் திண்டுக்கல் ஆறுமுகம் பாக்ஸிங் வேர்ல்டு அண்ட் பிட்னஸ் சார்பில் பங்கேற்ற அஸ்வினி மற்றும் சியாம் சுந்தர் 2 மாணவர்கள் தங்கத்தையும், வீரம்மல்லி மற்றும் தினேஷ் 2 மாணவர்கள் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். பரிசு பெற்ற மாணவ, மாணவிகளை ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
திண்டுக்கல்லில் ரயிலை விட்டு இறங்கிய ஆறுமுகத்திற்கு பாக்ஸிங் வேர்ல்டு உரிமையாளர் ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது குறித்து போட்டியில் பங்கேற்றவர்கள் கூறுகையில், போட்டி கடுமையாக இருந்தது. ஆறுமுகம் பாக்ஸிங் வேர்ல்டு மூலம் பயிற்சியாளர் ஆறுமுகம் காசிராஜனிடம் பயிற்சி பெற்றதால் எளிதாக நாங்கள் வென்றோம். இதனால் நாங்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொள்வோம். எங்கள் வெற்றிக்கு பயிற்சியாளர் முக்கிய பங்காற்றி வருகிறார் என்றார்.