அந்தரத்தில் தொங்கிய ‘ஈட்டி நாயகன்’ நீரஜ் சோப்ரா - வேற லெவலில் சாகசம் - வைரல் வீடியோ
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்றுகொடுத்து சாதனை படைத்தவர் நீரஜ் சோப்ரா.
1900ஆம் ஆண்டு தடகளப் போட்டியில் நார்மன் என்பவர் வெள்ளி வென்றுள்ளார். அதற்குப் பின் யாரும் ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை. அந்தக் குறையை 121 ஆண்டுகளுக்குப் பின் தீர்த்து வைத்தவர் நீரஜ்.
தடகளத்தில் முதல் முத்தான தங்கத்தை வென்றுகாட்டி 152 வருட வரலாற்றையும் அவர் மாற்றி எழுதினார். நாடு திரும்பிய அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்கை டைவிங் செய்து அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார் நீரஜ் சோப்ரா.
அந்த பதிவில், "விமானத்திலிருந்து குதிப்பதற்கு முன்பு கொஞ்சம் பயமாக தான் இருந்தது. ஆனால் குதித்த பிறகு செம ஜாலியாகவும் வேடிக்கையாகவும் இருந்ததாக” என்று பதிவிட்டுள்ளார். அவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஸ்கை டைவிங் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வைரல் வீடியோ -