டி வில்லியர்ஸ் அவுட்டானதும்... விரக்தியில் மகன் செய்த செயல் - வீடியோ வைரல்

sports
By Nandhini Sep 28, 2021 02:47 AM GMT
Report

ஐபிஎல் 2021 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் அணிகள் துபாயில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் ஆடிய பெங்களூரு (RCB) அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அந்த அணியின் தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல், 2வது ஓவரிலேயே பும்ரா பந்து வீச்சில் டக் அவுட்டானார். இருந்தாலும், அதனையடுத்து பாட்னர்ஷிப் அமைத்த விராட் கோலியும் கீப்பர் ஸ்ரீகர் பரத்தும் அற்புதமாக விளையாடினர். இருவருக்கும் இடையே சூப்பரான பாட்னர்ஷிப் உருவாகி வந்தது. அப்போது, தான், ஸ்ரீகர் பரத் 32 ரன்களில் ராகுல் சாகர் ஓவரில் வெளியேறினார்.

அதன் பிறகு களமிறங்கிய மெக்ஸ்வெல் நன்கு தனது ஆட்டத்தை விளையாடி பெங்களூரு அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினார். மறுமுனையில் அரைசதம் அடித்திருந்த கோலி 52 ரன்களில் மில்னே பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதைத் தொடர்ந்து ஏபி டி வில்லியர்ஸ் களத்தில் இறங்கினார்.

மெக்ஸ்வெலுடன் ஏபி டி வில்லியர்ஸும் இணைந்ததால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர தொடங்கியது. 18 வது ஓவரில் பும்ரா வீசிய 3 வது பந்தில் செட் ஆகி இருந்த பேட்ஸ்மென் மெக்ஸ்வெல் 56 ரன்களில் வெளியேறினார். அதற்கு அடுத்த பந்திலேயே ஏபி டி வில்லியர்ஸ் ஆட்டத்தை இழந்தார். சிக்சர் அடிக்க ஏபி டி முயற்சி செய்த போது, அவர் அவுட்டானார்.

அடுத்து அடுத்து 2 அதிரடி வீரர்கள் வெளியேறியதால் ஆர்சிபி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டி வில்லியர்ஸ் அவுட்டானதும் கேமரா அவரது குடும்பத்தினர் பக்கம் திரும்பியது. தனது தந்தை அவுட்டான விரக்தியான நிலையில் அங்கு இருந்த நாற்காலியில் ஓங்கி ஒரு அடி விட்டார் அவரது மகன்.

ஆனால் அது வலிக்கவே அடுத்த நொடி ஏன் இதை செஞ்சோம் என அவரது முகம் மாறியது. அவரது இந்த செயலைக் கண்டு டி வில்லியர்ஸின் மனைவி டேனியல் சற்று பதறிவிட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.