வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் மீது பரபரப்பு புகார் - சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிங் நடவடிக்கை
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மீது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புப் பிரிவு புகார் தெரிவித்திருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் சாமுவேல்ஸ்.இவர் 71 டெஸ்ட் மற்றும் 207 ஒரு நாள் போட்டி, 67 டி-20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2012, 2016-ம் ஆண்டு டி-20 உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் சாமுவேல்ஸ்தான்.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு அமீரகத்தில் நடந்த 10 ஓவர் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்று விளையாடினார். அப்போது, ஏற்பட்ட சர்ச்சையில் சிக்கினார். அது குறித்து விசாரித்த சர்வதேச கிரிக் கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவு அவர் மீது ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக 4 பிரிவுகளில் குற்றச்சாட்டை தற்போது பதிவு செய்திருக்கிறது.
அப்போட்டிகளின்போது அவருக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருள், பணம் அல்லது தான் பெற்ற இதர சலுகைகள் பற்றி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு தகவல் கொடுக்கவில்லை. இதனையடுத்து, 14 நாட்களுக்குள் அவர் பதில் அளிக்க வேண்டும் என்று அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகுதான் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் கூறப்பட்டுள்ளது.