ரூ.10 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்ட தங்கமகன் நீரஜ் சோப்ராவின் ஈட்டி!

sports
By Nandhini Sep 20, 2021 03:13 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டிருக்கின்றன. ஏலத்தில் பிரதமருக்கு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்கள் அளித்த ஈட்டி , பாக்சிங் கிளவ் மற்றும் அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி வடிவம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. இந்த ஏலம் அக்டோபர் 7ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

பொதுமக்கள் இந்த ஏலத்தில் பங்கேற்று, கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு உதவுமாறு, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆன்லைன் மூலமாக ஏலம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி, லவ்லினா பயன்படுத்திய பாக்சிங் கிளவ் ஆகியலை தலா 10 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளன.

ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். தங்கமகன் நீரஜ் சோப்ராவை இந்தியாவே கொண்டாடியது. இந்நிலையில், அவர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் தான் பயன்படுத்திய ஈட்டியை பிரதமருக்கு அவர் பரிசாக அளித்தார்.

தற்போது அந்த ஈட்டி தான் ஏலத்திற்கு வந்திருக்கிறது. அதே போல் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா பயன்படுத்தி பாக்சிங் கிளவும் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டிருக்கிறது. 

ரூ.10 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்ட தங்கமகன் நீரஜ் சோப்ராவின் ஈட்டி! | Sports