‘உங்கள் ஒவ்வொருவரையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்’ - இந்திய வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்து

sports viral news
By Nandhini Aug 24, 2021 06:51 AM GMT
Report

பாராலிம்பிக் போட்டிகள் பங்கேற்க உள்ள இந்திய விளையாட்டு அணியினருக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு இன்று தொடங்க உள்ளது.

2020-ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்தன. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்போட்டிகளில் 163 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்தியாவிலிருந்து 54 பேர் கொண்ட குழு 9 விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். பாராலிம்பிக்ஸில் இந்தியாவில் இருந்து அதிக வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்வது இதுவே முதன்முறையாகும்.

தமிழக வீரர் மாரியப்பன், தொடக்க விழா அணிவகுப்பின் போது தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். இந்நிலையில் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணியினருக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் எங்களை பெருமைப்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார். 

‘உங்கள் ஒவ்வொருவரையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்’ - இந்திய வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்து | Sports