‘தங்க மகன்’ நீரஜ் சோப்ராவுக்கு கவுரவம் - ஒவ்வொரு ஆண்டும் ஆக. 7ம் தேதி ஈட்டி எறிதல் தினமாக கொண்டாடப்படும் என அறிவிப்பு!
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி ‘ஈட்டி எறிதல் நாள்’ என்று பெயரிட இந்தியா தடகள சம்மேளனம் முடிவு செய்திருக்கிறது.
இந்திய தடகள சம்மேளத்தின் திட்டக் குழு தலைவர் லலித் பனோட் பேசுகையில், ஈட்டி எறிதல் விளையாட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி இந்தியா முழுவதும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படும் என்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற, இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஆகஸ்ட் 7ம் தேதி அன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் தடகள போட்டிகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.