டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் வெற்றி!
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் பங்கேற்று ஆடினர். இதில் ஆடவர் அணி பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் கொண்ட அணி தோல்வி அடைந்தது. இதே போல், தனிநபர் சுற்றில் தருண் தீப் ராய் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.
இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், ரஷ்யாவைச் சேர்ந்த கால்சனை எதிர்கொண்டு விளையாடினார். இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரவீன் ஜாதவ், 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். இந்த சுற்றில் அமெரிக்காவின் எலிசனை பிரவீன் ஜாதவ் எதிர்கொண்டு ஆட உள்ளார்.
India's @pravinarcher will be in action in some time. Stay tuned for more updates. #Archery #Olympics #Cheer4India pic.twitter.com/YTmkgyYvgW
— SAIMedia (@Media_SAI) July 28, 2021