ஒலிம்பிக்ஸ் 2021: டென்னிஸில் சானியா மிர்சா ஜோடி தோல்வி!

sports
By Nandhini Jul 25, 2021 06:17 AM GMT
Report

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 23ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைசெய்யப்பட்ட ஒலிம்பிக், தற்போது கொரோனா அச்சுறுத்தலையும் தாண்டி சவாலுடன் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளிலிருந்து 11,300 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவிலிருந்து 120க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஹாக்கி, துப்பாக்கிச் சுடுதல், டேபிள் டென்னிஸ் , பளுதூக்குதல், வில்வித்தை உள்ளிட்ட பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மகளிர் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க கணக்கை துவக்கி வைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா ஜோடி உக்ரைனின் லுட்மிலா விக்டோரிவ்னா கிச்செனோக்- நாடியா விக்டோரிவ்னா கிச்செனோக் ஜோடியுடன் மோதின. இவர்கள் இருவரும் சகோதரிகள்.

இந்தியா தரப்பில் சானியா மிர்சா அனுபவமிக்க வீராங்கனை. அங்கிதா ரெய்னாவுக்கு இதுதான் முதல் ஒலிம்பிக்ஸ் போட்டி. அனுபவமும், இளம் ரத்தத்தின் வேகமும், கைகொடுக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், உக்ரைன் சகோதரிகளின் கையே போட்டியில் ஓங்கியிருந்தது.

இறுதியில் 6-0, 7-6, 10-8 என்ற செட் கணக்கில் உக்ரைன் சகோதரிகளிடம் சானியா ஜோடி வீழ்ந்தது. இதன்மூலம் அவர்கள் இருவரும் வெளியேறியுள்ளனர். இதன்மூலம் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

ஒலிம்பிக்ஸ் 2021: டென்னிஸில் சானியா மிர்சா ஜோடி தோல்வி! | Sports