பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - 4 வது சுற்றில் 16 வது முறையாக முன்னேறினார் ரபேல் நடால்
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ரபேல் நடால் 16வது முறையாக 4 வது சுற்றிற்கு நுழைந்திருக்கிறார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஆடவர் பிரிவு 3வது சுற்றுப் போட்டியில், நடாலும் பிரிட்டனைச் சேர்ந்த கோமரூன் நோரியும் மோதிக் கொண்டனர்.
இதில் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நடால் வெற்றிப் பெற்றார். இதனையடுத்து அவர், 4வது சுற்றுக்கு முன்னேறிச் சென்றார். இதனையடுத்து 16வது முறையாக நடால் பிரெஞ்ச் ஓபனில் 4வது சுற்றில் விளையாட தகுதிப் பெற்றிருக்கிறார். இவர் தன்னுடைய அடுத்த சுற்றில் இத்தாலியின் ஜன்னிக் சின்னரை எதிர்த்து களமிறங்குகிறார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், ஜெர்மன் வீரர் டொமினிக் கோப்ஃபெர் ஆகியோர் மோதிக்கொண்டனர்.
இதில், அனுபவ வீரரான பெடரர் முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார். 2-வது செட்டை ஜெர்மனி வீரர் 7-6 என கைப்பற்றினார். 3-வது செட்டை பெடரர் 7-6 கைப்பற்றினார். நான்காவது செட்டையும் 7-5 என கைப்பற்றினார்.
இறுதியில் பெடரர் 7-6, 6-7, 7-6, 7-5 என்ற கணக்கில் ஜெர்மனி வீரரை போராடி வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறிச் சென்றார். இதேபோல மற்றொரு 3வது சுற்று ஆட்டத்தில் நோவான் ஜோகோவிச் வெற்றிப் பெற்று 4வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.