சென்னை விமான நிலையத்தில் 107 அரியவகை சிலந்திகள் பறிமுதல்!
சென்னை விமான நிலையத்தில் இன்று போலாந்து நாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய சிலந்தி வகையில் உள்ள 107 சிலந்திகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
போலந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றின் மீது சந்தேகமடைந்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதனை சோதனையிட்டனர்.
அப்போது அந்த பார்சலில் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலந்தி வகையைச் சேர்ந்த 107 சிலந்திகள் இருந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் அந்தப் பார்சலை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பார்சலில் இடம்பெற்றுள்ள முகவரி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலைய சுங்கத்துறை: சென்னை அயல்நாட்டு தபால் அலுவலகத்தில் போலந்து நாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலிலிருந்து 107 உயிருள்ள சிலந்திகள் (CITES பட்டியலில் உள்ள டரண்டுலா சிலந்திகள்) சுங்க சட்டம் r/w FT (D&R) சட்டப்படி கைப்பற்றப்பட்டன. @nsitharaman @ianuragthakur @cbic_india pic.twitter.com/Tdl1rPXRm5
— Chennai Customs (@ChennaiCustoms) July 2, 2021
கடந்த சில வருடமாக மருத்துவ ஆராய்சிக்காக சிலந்திகள் சர்வதேச அளவில் கடத்தப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.