விண்வெளி நிலையத்தை அச்சுறுத்தும் ஆபத்து - விண்வெளி கழிவுகள் மோதும் அபாயம்

Space waste Risk of collision
By Thahir Nov 15, 2021 11:07 PM GMT
Report

விண்வெளி கழிவுகள் மோதும் அபாயம் உள்ளதால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பூமியில் இருந்து 408 கிலோ மீட்டருக்கு அப்பால் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த விண்வெளி நிலையத்தை நிறுவியுள்ளன.

அமெரிக்கா மற்றும் ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் இந்த விண்வெளி நிலையத்தில் தங்கி சுழற்சி முறையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே விண்வெளியில் ஒவ்வோர் ஆண்டும், முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமான செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுவதால் ‘‘விண்வெளிக் குப்பைகள்’’ என அழைக்கப்படும் விண்வெளிக் கழிவுகள் அதிகரித்து வருகின்றன.

இந்த விண்வெளி கழிவுகள் அவ்வப்போது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அச்சுறுத்தலமாக மாறி வருகிறது.

கடந்த செம்படம்பர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது விண்வெளி கழிவுகள் மோதும் சூழல் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அப்போது விண்வெளி நிலையத்தில் இருந்த விண்வெளி வீரர்கள் விண்வெளி கழிவுகளுடன் மோதுவதை தவிர்க்க விண்வெளி நிலையத்தை குறிப்பிட்ட தூரத்துக்கு நகர்த்தினர்.

இந்தநிலையில் விண்வெளி கழிவுகளால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

விண்வெளி கழிவுகள் மோதும் அபாயம் இருப்பதல் விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்களை விண்கலத்துக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ரோஸ்கோஸ்மோஸ் கூறியது.