தென் மாவட்ட மக்களே கவனம்.. ரயில்வே முக்கிய அறிவிப்பு!
Diwali
Indian Railways
By Sumathi
சிறப்பு ரயில் நேர பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்
தீபாவளியை ஒட்டி தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அக்டோபர் 22ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும்
இந்த சிறப்பு ரயில், காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம்,
விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில், வரும் அக். 23ம் தேதி பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.
நள்ளிரவு 12.05 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.