இந்திதான் தேசிய மொழியா ? இந்தி நடிகரை அலறவிட்ட தென்னிந்திய நடிகர்

By Irumporai Apr 28, 2022 08:03 AM GMT
Report

கேஜிஎப் திரைப்படத்தின் வெற்றி குறித்து சமீபத்தில் பேசிய சுதீப் பான் இந்தியா படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டதாக கூறினார்கள் அதில் ஒரு சிறிய திருத்தம் செய்ய நான் விரும்புகிறேன்.

இந்தி இனி தேசிய மொழி அல்ல என கூறினார். சுதீப்பின் இந்த கருத்திற்கு நடிகர் அஜய்தேவ்கான் தனது ட்விட்டர் பதிவில் : உங்களின் கருத்துபடி இந்தி தேசியமொழி இல்லை என்றால் ஏன் கன்னட படங்களை மொழி மாற்றம் செய்து இந்தியில் வெளியிடுகிறீர்கள் ? இந்திட் தான் நமது தேசிய மொழி என இந்தியில் ட்வீட் செய்திருந்தார் அஜய் தேவ்கான் .

அவரது ட்வீட்டர் பதிவிற்கு பதிலளித்த சுதீப் : இந்தியில் நீங்கள் அனுப்பிய கருத்து எனக்கு புரிகிறது இந்தி மொழியை நாம் அனைவரும் நேசித்து கற்றுக்கொள்வோம். குற்றமில்லை சார். ஆனால் உங்கள் கேள்விக்கு எனது பதிலை கன்னட மொழியில் பதிவு செய்திருந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன்.

நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா.?” என பதிலளித்துள்ளார்.

அதற்கு அஜய் தேவ் கான் ” நீங்கள் என் நண்பர். நான் தவறாக புரிந்துகொண்டதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி. எப்போதும் நமது துறை ஒன்று என்றே நான் கருதி வருகிறேன். நாம் எல்லா மொழிகளையும் நேசிக்கிறோம்.

அதே போல எல்லோரும் நமது மொழிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என பதிவிட்டுள்ளார். தற்போது இருவரின் இந்த ட்வீட்டர் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது