டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: நேரில் பார்க்க முடியாத நிலையில் சவுரவ் கங்குலி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நேரில் காண பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும், செயலாளர் ஜெய் ஷாவும் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறுகிறது. இதன் பின்பு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த சுற்றுப் பயணத்துக்காக விளையாடும் இந்திய வீரர்கள் மும்பையில் இருக்கும் ஹோட்டலில் 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர், இந்தப் போட்டியை நேரில் காண கங்குலியும், ஜெய் ஷாவும் செல்லவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அவர்கள் வருவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. ஏனென்றால் நேரில் செல்வதற்கு முன்பு பயோ பபுள் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் அவர்கள் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.