ஐஸ்வர்யாவை பார்த்து பழகிய சவுந்தர்யா - என்ன அது தெரியுமா?
அண்மை காலமாகவே ஐஸ்வர்யா குறித்து நாளுக்கு நாள் அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது. தினமும் அவரை பற்றி அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துகிடக்கின்றனர்.
இந்நிலையில் அவர் குறித்து அவரது தங்கை சவுந்தர்யா முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா சர்வா யோக மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அங்கு சென்று யோகா செய்யும் நிகழ்வை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் வெளியிட்டு வருகிறார்.
அவர் அனைவரையும் யோகா செய்ய சொல்லி வலியுறுத்தி வருகிறார். இன்னொரு விஷயம் அவருக்கு முக்கியமாக பிடித்த விஷயமாக உள்ளது.
அது அவர் மிகவும் விரும்பும் சைக்கிளிங். அவர் அடிக்கடி தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார்.
அதிகாலை நேரத்தில் சாலைகள் ஃப்ரீயாக இருக்கும் போது தன் சைக்கிளிங் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதனால் இந்த இரண்டு விஷயங்களும் அவர் விரும்ப கூடியதாக உள்ளது.இதையடுத்து தற்போது சவுந்தர்யாவும் சைக்கிள் வாங்கி கொண்டு சைக்கிளிங் செல்ல துவங்கி விட்டாராம்.
சவுந்தர்யாவும்,ஐஸ்வர்யாவும் ஏற்கனவே ஒற்றுமையாக இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் அவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது.