நீண்ட நாட்களுக்குப் பின் சென்னை வரும் சோனியா காந்தி - என்ன காரணம்?
சென்னை வரும் சோனியா காந்திக்கு, பிரம்மாண்ட வரவேற்பிற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
மகளிர் உரிமை மாநாடு
திமுக மகளிர் அணி சார்பில் வரும் 14ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 'மகளிர் உரிமை மாநாடு' நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த பெண் தலைவர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.
அதன்படி, னிமொழி எம்.பி. விடுத்த அழைப்பின் பேரில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே,
சோனியா காந்தி வருகை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி என பலர் வருகை தருகின்றனர். இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு சோனியாகாந்தி சென்னை வரவுள்ளார். தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி
சென்னை விமான நிலையத்தில் சோனியாவுக்கு வரலாறு காணாத வரவேற்பு கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும், வழிநெடுக உற்சாக வரவேற்பு கொடுக்க கே.எஸ்.அழகிரி, சென்னை சுற்றுவட்டார மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.