முன்னாள் இந்திய பிரதமர் நேருவின் பிறந்தநாள் - நினைவிடத்தில் சோனியாகாந்தி மலர் தூவி அஞ்சலி

India Birthday
By Nandhini Nov 14, 2022 05:48 AM GMT
Report

முன்னாள் இந்திய பிரதமர் நேருவின் பிறந்தநாளையொட்டி அவர் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஜவகர்லால் நேரு

இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றவர் பண்டித ஜவகர்லால் நேரு. இவர் கடந்த 1889ம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டதால், நேருவின் பிறந்தநாள் இந்தியாவில் குழந்தைகள் தினமாக வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சோனியாகாந்தி மலர் தூவி அஞ்சலி

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள சாந்தி வனம் என்ற அவரது நினைவிடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரசார் இன்று சென்றனர்.

அவர்கள் நேருவின் நினைவிடத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்கள். சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் மற்றும் தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரு காட் சென்று அஞ்சலி செலுத்தினர்.  

sonia-gandhi-jawaharlal-nehru-birthday